மாடு கடத்திய யாழ் குற்றத்தடுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியிலிருந்து 9 மாடுகளை திருடி வந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டைதீவு காவலரனில் வைத்து நேற்று இரவு சந்தேகத்துக்குரிய வாகனத்தை சோதனைக்குட்படுத்திய போது மாடுகள், சித்திரவதைக்கு உள்ளான நிலையில் இறைச்சிக்காக கொண்டு சென்ற நிலையில் மீட்கப்பட்டது
இச்சம்பவத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், புத்தளம் பாலாவி ஹிஜ்ரத்புரம் பகுதியச் சேர்ந்த இருவரும் திருட்டு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீவு பகுதிகளில் இருந்து கால்நடைகள் கடத்தப்படுவது பல வருடங்களாக நடந்து வருகிறது. இதனை தடுக்க பல முயற்சிகளை சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்ட போதிலும் கால்நடைகள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.