16 வயது சிறுமியுடன் திருமணமான பெண் ஓட்டம்!

1 Min Read

16 வயது சிறுமியுடன் திருமணமான பெண் ஓட்டம்!

ஓரினச்சேர்க்கை மோகத்தால் கணவரை விட்டுவிட்டு அவரது நெருங்கிய உறவுக்காரரின் மகளான 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கணவன் – மனைவி போல் வாழ்ந்த 24 வயது இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இளம்பெண்ணுக்கும் அவரது கணவரின் நெருங்கிய சொந்தக்காரரின் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் மிகவும் நெருக்கமாக மாறி உள்ளது.

இதற்கிடையே கடந்த பெப்ரவரி மாதம் 27 ம் திதி திடீரென்று திருமணமான இளம்பெண் மற்றும் 16 வயது சிறுமி ஆகியோர் மாயமாகினர்.

அனைத்து இடங்களிலும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இருவரும் மாயமாகி ஒரு மாதம் கடந்தாலும் கூட பொலிஸாரால் அவர்கள் 2 பேரையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கடந்த வாரம் 2 பேரையும் ​பொலிஸார் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

24 வயது இளம்பெண்ணுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. அதன்பிறகு கணவரின் நெருங்கிய உறவுக்காரின் 16 வயது சிறுமியுடன் அவர் பழகி உள்ளார். இதில் திருமணமான 24 வயது பெண் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் (லெஸ்பியன்) என தெரிவித்துள்ளார்.இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இதையடுத்து கணவரின் உறவுக்கார 16 வயது சிறுமியை வேறு கிராமத்திற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர்.

தற்போது கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருமணமான 24 வயது பெண்ணை கைது செய்துள்ளனர்.