மன்னார் சிறுமி வல்லுறவின் பின் கொலை:பிரேத பரிசோதனை முடிவு!

1 Min Read

மன்னார் சிறுமி வல்லுறவின் பின் கழுத்து நெரித்தே கொலை!! பிரேத பரிசோதனை முடிவு!

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயதான சிறுமி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை  பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தலைமன்னார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன அ.ஆன்கியான்சிதா என்ற சிறுமி, நேற்று (16) அதிகாலை 3.30மணியளவில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் தற்போது அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியை  வல்லுறவுக்குள்ளாக்கி படுகொலை செய்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.